தோப்பிலும் தோப்பிலைப் பற்றியும்
மதிப்புரை தேங்காய்ப்பட்டணமும் மாப்பிள்ளைப் பாட்டுகளின் வேர்களும் தோப்பில் முகம்மது மீரான் (ப-ர்): இர. பிரபா எதிர் வெளியீடு 96, நியுஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி - 642 002 பக். 120 ரூ. 130 தோ ப்பில் முஹம்மது மீரான் மறைந்து சில மாதங்கள் கழித்து அவரது தேங்காய்ப் பட்டணத்து இல்லத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு குடியிருந்தவர், “தேங்காய்ப் பட்டணம் பற்றித் தெரிந்துகொள்வதற்கு யூடியூப் வலைக்காட்சியில் நிறையக் காணொளிகள் இருக்கின்றன. ஆனால் தோப்பிலைப் பற்றியும் இந்த வீட்டைப் பற்றியும் தெரிந்துகொள்வதற்கு ஒரு வழியும் இல்லையே” என வருத்தப்பட்டார். தேங்காய்ப் பட்டணம் பற்றி அறியாதவர்களுக்குத் தோப்பிலின் கைபிடித்து உலாவரும் வாய்ப்பைத் தந்திருக்கிறது இந்நூல். தோப்பிலின் மூளையிலுள்ள ஒவ்வொரு அணுக்களிலும் தேங்காய்ப் பட்டணம் நிறைந்திருந்ததுபோலும். அதன் பூகோளவியல், சமூகவியல், வரலாறு, உணவு, கலை என அனைத்தையும் கதை சொல்வதுபோலச் சொல்கிறார். அவருக்கு மட்டும் எப்படி அத்தனை கதைகள் தெரிந்திருக்கிறதென்று வியப்பாக உள்ளது. தன்னுடைய பிறந்தநாள் குறித்துக்கூட அவரிடம் கதை இருக்கிறது. ஊரின் ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு கதை சொல்கிற...