Posts

Showing posts from May, 2021

கார்த்திக் சுவாமிநாதன் கேமரா வழியே தனுஷ்

Image
திரை அ ரங்கு முழுவதும் கைதட்டல்கள் ஒலிக்க, என்ன நினைப்பதென்றே தெரியாமல் கார்த்திக் தடுமாறும் அந்தக் காட்சி... தன் திரைவாழ்வில் இப்படியான நடிப்பை, அதற்கு முன்னரும் பின்னரும் தனுஷ் வெளிப்படுத்தியதில்லை என்றே சொல்லலாம். ஒரு கதாபாத்திரம் தன்னை முழுவதுமாக ஆட்கொள்ள அனுமதித்து, பின் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து வெளியேறும் வித்தை தனுஷுக்கு வாய்த்திருப்பது நிச்சயம் ஆச்சரியமானதல்ல. தன் தேர்வுகள் குறித்தும், தன் அளவுகோல்கள் குறித்தும், தன் திறமை குறித்தும் அவருக்குத் தெளிவான பார்வை இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களில் தனிப்பட்ட தனுஷ் பிரதிபலித்துவிடக் கூடாது என்ற பிரக்ஞை இருப்பதும் முக்கியமானது. ஆனால் அதையும் மீறி கார்த்திக் சுவாமிநாதனுக்குள் தனுஷ் வெளிப்பட்டதுதான் இக்கட்டுரையின் மையப்புள்ளி. கஸ்தூரிராஜா – விஜயலட்சுமி தம்பதியினரின் கடைசி பிள்ளை தனுஷ். மூத்தவர் செல்வராகவன், படிப்பில் கெட்டிக்காரர்; பொறியியல் பட்டதாரி. இரண்டு சகோதரிகளும் மருத்துவர்கள். குடும்ப சூழல் காரணமாக தனுஷ் மட்டும் பள்ளிப் படிப்போடு நிறுத்திக்கொண்டு திரைத்துறைக்குள் நுழைகிறார். நமக்குத் தெரிந்தவரைய...

கதாநாயக அரசியல் ‘தர்பார்’, ‘பட்டாஸ்’ படங்களை முன்வைத்து

Image
திரை   அ ண்மையில் வெளியான ‘தர்பார்’ திரைப்படமும் ‘பட்டாஸ்’ திரைப்படமும் தமிழ் சினிமா குறித்து மற்றொரு பார்வையை என்னுள் உருவாக்கின. இவ்விரண்டு திரைப்படங்களையும் முன்வைத்து இதுவரையிலான தமிழ் சினிமா பற்றிய ‘பொது’ பார்வையை விவரிப்பதற்கு ஒரு காலப்பயணம் மேற் கொண்டேன். முன்கதை ஒவ்வொரு நாட்டின் உணவு முறைக்கும் அந்நாட்டில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கும் தொடர்பிருப்பதற்கு வாய்ப்புள்ளது. நம் நாட்டில் ஒரு வேளை உணவிலேயே அறுசுவைகளும் பரிமாறப்படுகின்றன. அதைப்போலவே நம் திரைப்படங்களிலும் நவரசங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன. விகிதாச் சாரம் வேறுபடலாம், ஆனால் கலவை மாறாது. இதன் காரணமாகக்கூட ‘மசாலா திரைப்படங்கள்’ என்ற பெயர் வந்திருக்கலாம். 2020 ஆதித்யா அருணாச்சலம் என்ற அவதாரத்தில் ரஜினி நிகழ்த்தியிருக்கும் சாகசங்கள்தான் ‘தர்பார்’. ரஜினி கடவுளாகவே மாறியிருக்கிறார். அவர் என்ன நினைத்தாலும் நடக்கிறது. ஐம்பது துப்பாக்கிகளையும் மீறி ஒற்றை வாளால் எதிரிகளை வதம் செய்கிறார். அவர் யாருக்கும் பணிந்து போவதில்லை, மனித உரிமை அதிகாரியை மிரட்டுகிறார்; உயர் அதிகாரியை மிரட்டுகிறார்; அமைச்சரை மிரட்டுகிறார். அவருக்கு ஏ...

குதிரைவீரன் வருகை

Image
கட்டுரை   அ னைத்து மதங்களும் உலகத் தோற்றம் குறித்தும் உயிரினங்களின் உருவாக்கம் குறித்தும் தம்முடைய வேதங்களில் பதிவுசெய்திருக்கின்றன. அந்தந்த மதங்களின் கருத்துகளை அந்தந்த மதத்தினர் உண்மையென நம்புகின்றனர். கால வரலாற்றின்படி பழைய மதம், புதிய மதம் என்ற பாகுபாடெல்லாம் இந்த நம்பிக்கைகளுக்குக் கிடையாது. *** ‘கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி!’ இவ்வரிகளை அனைவரும் அறிவர். கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட கூற்றுப்போல தெரியும் இவ்வரிகளுக்குத் தமிழறிஞர்கள் ஓரளவு ஏற்றுக்கொள்ளும்படியான விளக்கத்தை அளித்துள்ளனர். கல் என்பது குறிஞ்சி நிலத்தைக் குறிப்பதாகவும், மண் என்பது மருத நிலத்தைக் குறிப்பதாகவும் கருதும¢அவர்கள் காடுகளில் சுற்றித்திரிந்த ஆதி மனிதர்கள் நாகரிகமடைந்து உழவைக் கண்டறியும் முன்னரே பேசிய மொழிதான் தமிழ் என்று அவர்கள் விளக்குகிறார்கள். இந்த இரண்டு வரிகளை மட்டும் கருத்தில்கொண்டு அதற்கெனச் சொல்லப்பட்ட விளக்கம்தான் இது. அவ்வரிகளுக்கு முந்திய வரிகளையும் சேர்த்துப் படித்தால் வேறுசில பரிமாணங்கள் கிடைக்கும். ‘வையகம் போர்த்த, வயங்கொலி நீர் -கையகலக் கல் தோன்றி ...

ஜாஃபாவைப் பார்த்தபோது...

Image
கட்டுரை Illustration: Dominic Xavier/ Rediff.com அ ன்பு மகளே, அந்தச் சத்தம் உனக்குக் கேட்கிறதா? அச்சத்தம் தினமும் எனக்குக் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. சில சமயம் அலறலாகவும், சில சமயம் சோகப் பாடலாகவும், சில சமயம் மரண ஓலமாகவும் ஒலிக்கின்றது. ஏன் என்று கேட்கிறாயா? உனக்கு எப்படி சொல்வதென்று தெரியவில்லை. இங்கு நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது. இதுநாள்வரையில் அனுபவித்துவந்த மரண பயத்தைவிட இந்த வாழ்வுதான் மிகவும் அச்சுறுத்துகிறது. வழக்கமாகச் சந்தேகப்படும்படியான ஆட்களை இந்திய ராணுவம் விசாரிப்பது எல்லாரும் அறிந்ததே. கடந்த சிலநாட்களாகப் பலரைக் கைதுசெய்து ‘நன்கு’ விசாரிக்கிறார்கள்; கூடவே ஒலிபெருக்கி மூலம் அவர்களின் வலிகளை ஊரார் கேட்கச் செய்கிறார்கள். எப்போது நம்மை மனிதர்களாக நினைக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை. என்ன நடந்ததென்று கேட்கிறாயா? எனக்கும் அதுதான் புரியவில்லை. போன மாதம் வழக்கத்தைவிடக் கூடுதலாக ராணுவத்தினர் ஊருக்குள் வந்தனர். வீட்டின் ஜன்னலுக்கொரு சிப்பாய் என்ற கணக்கில் குவிந்திருந்தனர். அரசியல் தலைவர்களெல்லாரும் வீட்டுச் சிறையிலிருக்கிறார்கள் என்று ரஹீம் பாய் சொன்னார். மெஹபூபா...

பிச்சிப்பூ மணமும் சாம்பிராணி வாசனையும்

Image
  அஞ்சலி :  தோப்பில் முஹம்மது மீரான்  (1944 - 2019) ‘ அ ஸ்ஸலாமு அலைக்கும் வாப்பா ,’  நாற்காலியில் கண்மூடி அமர்ந்திருந்த வாப்பாவுக்கு என் வருகையைத் தெரிவித்தேன் .  புத்துணர்வோடு வரவேற்றார் .  அந்நேரம் அவர் என்னை எதிர்பார்த்திருக்க மாட்டார் . ‘ பிள்ளேய் !  கடுப்பம் கூட்டி ரெண்டுச் சாயா !’  என்று உற்சாகமானார் வாப்பா .  என் முகம் அத்தனை உற்சாகமாய் இல்லாததைக் கண்டு விவரம் கேட்டார் . ‘ தோப்பில் மவுத்தாயிட்டாரு ’  என்றேன் . ‘ படச்சோனே !’  என்று அதிர்ந்தார் . ‘ இன்னாலில்லாஹி ...’  என்று முணுமுணுத்தார் . பிறகு எதுவும் பேசாமல் நினைவுகளுக்குள் மூழ்கினார் .  சைனபா தாத்தா சாயா கொண்டு வந்தார் .  வாப்பாவைத் தட்டியெழுப்ப நகர்ந்தபோது தாத்தா தடுத்து , ‘ நான் பாத்துக்கறேன் ’  என்று தலையசைத்தார் .  வாப்பாவுக்குப் பின்னிருந்த மேசையை இழுத்து ,  அதன்மீது சாயாவை வைத்துவிட்டு உள்ளே சென்றார் தாத்தா .  சாயாவின் ஆவி வாப்பாவின் நாசியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது .  நான் சாயாவைக் குடித்துவிட்டுத் தாத்தாவை அழைத்து டம்ளரைக்...

புதுமையின் நாஸ்டால்ஜியா

Image
திரை அ ன்பார்ந்த வாசகர்களே, உங்களுக்கு அற்புதமான ஒரு கதையைச் சொல்லலாம் என்றிருந்தேன். நீங்கள் இதுவரை கேட்டிராத, நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் மரபுகளைக் கட்டுடைக்கும் கதை. இயற்கையின் இயல்புகளை வெளிப்படுத்தும் அக்கதையைச் சொல்ல நினைத்தபோதுதான் ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தைப் பற்றி எழுத வேண்டும் என்றார்கள். ஆகையால் முதலில் அதைப் பகிர்ந்துகொள்கிறேன். அதற்கும் முன்பாக அதுவைதம் பற்றிச் சொல்லிவிடுகிறேன். ஆதிசங்கரரின் தத்துவக் கோட்பாடுதான் அதுவைதம். ‘இருப்பது ஒன்றே’ என்பது அக்கோட்பாட்டின் சாரம்; இருப்பது பரம்பொருள் ஒன்றே, மற்றனைத்தும் மாயை; உயிர்களனைத்தும் பரம்பொருளின் வடிவங்கள். நம் அனைவருக்குள்ளும் இருக்கிற உயிர் (அ) ஆன்மா பரம்பொருள். உடலும் உடல்சார்ந்த உணர்வுகளும் உடல்சார்ந்த வாழ்க்கையும் மாயை. இருளில் கயிற்றைப் பாம்பென நினைப்பதுபோல. காலம், நேரம், இடம், மனம் என்பதெல்லாம் வெறும் கனவு. உடல்சார்ந்த தர்க்கங்கள் நீங்கும்வரை பாம்பெனும் மாயை நீங்காது. ஆன்ம ஒளியில் மனமெனும் மாயை நீங்கி, கனவிலிருந்து விழித்துக்கொண்டால் பரம்பொருள் எனும் நிலையை அடையலாம் என்கிறார் ஆதிசங்கரர். ● கே. பாலசந்தர் தன் திரைப்...