கார்த்திக் சுவாமிநாதன் கேமரா வழியே தனுஷ்
திரை அ ரங்கு முழுவதும் கைதட்டல்கள் ஒலிக்க, என்ன நினைப்பதென்றே தெரியாமல் கார்த்திக் தடுமாறும் அந்தக் காட்சி... தன் திரைவாழ்வில் இப்படியான நடிப்பை, அதற்கு முன்னரும் பின்னரும் தனுஷ் வெளிப்படுத்தியதில்லை என்றே சொல்லலாம். ஒரு கதாபாத்திரம் தன்னை முழுவதுமாக ஆட்கொள்ள அனுமதித்து, பின் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து வெளியேறும் வித்தை தனுஷுக்கு வாய்த்திருப்பது நிச்சயம் ஆச்சரியமானதல்ல. தன் தேர்வுகள் குறித்தும், தன் அளவுகோல்கள் குறித்தும், தன் திறமை குறித்தும் அவருக்குத் தெளிவான பார்வை இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களில் தனிப்பட்ட தனுஷ் பிரதிபலித்துவிடக் கூடாது என்ற பிரக்ஞை இருப்பதும் முக்கியமானது. ஆனால் அதையும் மீறி கார்த்திக் சுவாமிநாதனுக்குள் தனுஷ் வெளிப்பட்டதுதான் இக்கட்டுரையின் மையப்புள்ளி. கஸ்தூரிராஜா – விஜயலட்சுமி தம்பதியினரின் கடைசி பிள்ளை தனுஷ். மூத்தவர் செல்வராகவன், படிப்பில் கெட்டிக்காரர்; பொறியியல் பட்டதாரி. இரண்டு சகோதரிகளும் மருத்துவர்கள். குடும்ப சூழல் காரணமாக தனுஷ் மட்டும் பள்ளிப் படிப்போடு நிறுத்திக்கொண்டு திரைத்துறைக்குள் நுழைகிறார். நமக்குத் தெரிந்தவரைய...